கிராஸ் வேர்ல்ட் செயலி மூலம் பண மோசடி..!! திருப்பத்தூர் காவல் நிலையத்தில் குவிந்த புகார் மனு..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் போலி செயலியில் (கிராஸ் வேர்ல்ட்) பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் நகர காவல் நிலையத்தில் குவிந்து புகார் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களான சோலூர் , மின்னூர், ஐயனூர், வீராங்குப்பம், உமராபாத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தனியார் தோல் தொழிற்சாலை மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர் .
இந்நிலையில் கிராஸ் வேர்ல்ட் என்னும் செயலியில் விளையாடினால் பணம் வருவதாகவும் மேலும் 9,500 செலுத்தினால் தினமும் 450 ரூபாய் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டதை கண்ட சுமார் 3000 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அட்சயிலியில் பணத்தைக் கட்டி உள்ளனர் பணத்தைக் கட்டிய சில தினங்கள் மட்டுமே அந்த செயலியில் இருந்து கட்டியவர்களுக்கு பணம் வந்துள்ளது.
இதை அடுத்து மேலும் பலர் அதிக அளவில் பணத்தை கட்டி உள்ளனர் இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அச்செயலி வேலை செய்யாமல் முடக்கப்பட்டுள்ளது இதை அடுத்து பணம் கட்டியவர்கள் செய்வது அறியாமல் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் சுமார் 35- க்கும் மேற்பட்டோர் நகர காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் சண்முகத்திடம் மனு அளித்தனர்.
இதில் தங்களுடைய பணத்தை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தனர் இதுகுறித்து அவர் மனுக்களை பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்வதாக கூறிய அனுப்பினார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..