சனாதன தர்மம் குறித்து கடந்த 100 ஆண்டுகளாக பேசி வருகின்றோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பிரதமர் மோடி இன்று இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்ற பெயர் வைத்தது எனக்கு தெரியாது.சனாதன தர்மத்தை ஒழிக்கவேண்டும் என்று கண்டந்த 100 ஆண்டுகளாக திமுக பேசிவருகிறது இது திசை திருப்பும் நோக்கம் அல்ல. மேலும் அதை திமுக அரசு நடைமுறைக்கு கொண்டும்வந்தும் உள்ளது . அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்று நடைமுறை படுத்தியது யார்.
பின்னர் செய்தியாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை விமர்சனம் செய்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு ஜெயக்குமார் தலையில் முடி இல்லை அவரால் சீப்பு வைத்து சீவ முடியாது என்று செய்கையில் கிண்டல் செய்தார்