உயர்கல்வித்துறை சார்பில் 23 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்
- அனைத்து உயிர்கள் நிறுவனங்களிலும் நிறுவன வளத் திட்டமிடுதல் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் வேளாண்மை அமைப்பு மென்பொருள் 150 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளில் தொழிலாளர்களின் தேவைக்கேற்ப புதிய தொழிலிடைக் கல்வி பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
- அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
- 7 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 31 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு 1Gbps அளவிலான தொடர் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.
- மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக சென்னை மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் புதிய திறன் பயிற்சி மையம் 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- கோயம்புத்தூர் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு மகளிர் பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மின்சார வாகன இயக்க மையம் நிறுவப்படும்.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்
- அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் 10 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்
- 3 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் கல்வி பயிலும் பொழுதே வருமானம் ஈட்டும் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.
- ஐந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை வணிக வேளாண்மை பட்டப்படிப்பும், 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மோதுநிலை கணினி பயன்பாட்டியல் பட்டப்படிப்போம் தொடங்கப்படும்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கப்படும்.
- 2012- 13 ஆம் ஆண்டு மற்றும் 2022 – 23ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் 68.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- காமராசர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதி 180 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளுக்கு தேவையான தளவாடங்கள் 10 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்
- அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில் நுட்ப நிறுவன வளாகத்தில் கூடுதல் உணவு கூட 5.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்
- அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் வளாகத்தில் உள்ள விடுதிகளில் இணைய வசதி 1.8 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
- அண்ணா பல்கலைக்கழக கோயம்புத்தூர் மண்டல வளாகத்தில் புதிய கல்வி கட்டிடம் 15 புள்ளி 51 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
- மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டு பயிற்சி வழங்க 3.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள புகழ்பெற்ற நூற்றாண்டு விழா மண்டபம் புதுப்பிக்கப்படும்
- சென்னை பல்கலைக்கழகத்தில் சேப்பாக்கம் வளாகத்தில் பெண்கள் விடுதி கட்டப்படும்.
- தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறைவான மாணாக்கர் சேர்க்கை உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.