சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகமாகி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
எழும்பூர் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் கண் சிகிச்சைகள் குறித்து இன்று கேட்டு அறியப்பட்டது, பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் பெற்று வருபவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தோம்….
மெட்ராஸ் ஐ சென்னையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது, சென்னை மட்டும் இல்லாமல் மகாராஷ்டிரா ராஜஸ்தான் புது டெல்லி வடகிழக்கு மாநிலங்களான அசாம் மேகாலயா திரிபுரா மிசோரம் போன்ற மாநிலங்களிலும் இந்த நோய் அதிகரித்து வருகிறது….
வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்பாகவே இந்த நோய் பாதிப்பு கூடுதலாகி இருக்கிறது…
இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களை பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் இந்த மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது….
முதல்வர் அவர்கள் எடுத்த விழிப்புணர்வு காரணமாக இந்த ஆண்டு நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது
கடந்த காலங்களில் வடகிழக்கு பருவ மழை வருவதற்கு முன்பு இது போன்ற நோய் வரும் பொழுது நூற்றுக்கணக்கான பேருக்கு இந்த நோய் வரும், முதல்வர் அவர்களின் விழிப்புணர்வின் காரணமாக தற்போது நூறுக்கும் கீழ் தான் இந்த நோய் பாதிப்பு இருக்கிறது….
எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐக்கு என்று தனி வாடு உள்ளது இந்த மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்….
இந்த நோய் இருப்பவர்களுக்கு கண் சிவந்து போய் இருக்கும் கண்களில் நீர் வழியும் கண்களில் எரிச்சல் ஏற்படும் கண்களில் அரிப்பு ஏற்படும் இதுதான் மெட்ராஸ் ஐ வருபவர்களுக்கு அறிகுறியாக இருக்கும்…
இந்த நோய் பருவநிலை மாறுபாடு மற்றும் ஒரு வகையான வைரசால் வருகிறது….
மெட்ராஸ் ஐ ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டால் இதை தொற்றிக் கொள்ளாது, ஒருவருக்கொருவர் நேரடியாக பார்த்துக் கொள்வதால் இந்த தொற்று ஏற்படாது….
கண் நோய் பாதித்தவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்திற்கு செல்லக்கூடாது….
இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி நல்ல நீரினால் கண்களை துடைக்க வேண்டும் கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும், கண் மருத்துவர்கள் ஆலோசனை பெற்ற பிறகு சொட்டு மருந்துகள் விட வேண்டும், சொட்டு மருந்து என்று சொல்லி எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளக் கூடாது, அதேபோல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது….
கண் நோய் பாதித்தவர்கள் இடமிருந்து மற்றவர்கள் சற்று விலகியே இருக்க வேண்டும்….
இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் பால், கிரேட், பச்சைக் கீரை காய்கறிகள் மீன் உள்ளிட்டவைகளை உட்கொள்வது நல்லது, எலுமிச்சம்பழம் நார்த்தங்காய் சாத்துக்குடி போன்ற பழ வகைகளையும் பயன்படுத்துவது நல்லது…
இந்த வழிகாட்டி முறைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்….
கண் பாதிப்பு ஜூலை 78, ஆக் 240 இந்த மாதம் 203 என்ற எண்ணிக்கையில் வந்து உள்ளனர்….
கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கண் சிகிச்சை மூலம் பயன் பெற்றவர்கள் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்படுத்த 28,235 பேர் இந்த மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள்…
தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மருத்துவமனைகளை உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தி இருக்கிறோம்…. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவமனைகளிலும் மெட்ராஸ் ஐ காண மருந்துகள் தயார் நிலையில் உள்ளது….
420 மருத்துவர்களைக் கொண்டு இந்த நோய்க்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மருத்துவமனை உதவியாளர்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளன.. இந்த குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை, தமிழ்நாடு அரசு இந்த நோய் குறித்து முறையாக கண்காணித்து வருகிறது முறையான சிகிச்சைகளும் அலிக்கப்பட்டு வருகிறது…
இந்த நோய்க்கான மருந்துகள் போதுமான அளவிற்கு மருத்துவமனைகளில் உள்ளது. ஒரு பெரிய அளவிலான விழிப்புணர்வு தேவை அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகள் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என 12 லட்சம் படித்து வருகிறார்கள்…
12 லட்சம் மாணவர்களுக்கும் இந்த மாதம் கண் பரிசோதனைகளை செய்யலாம் என்று தமிழ் நாடு முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்கள் வருகிற 16-ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக இருக்கின்ற அனைத்து பள்ளிகளிலும் 400 கண் மருத்துவர்கள் மட்டுமில்லாமல் தனியார் மருத்துவர்களையும் வைத்து கொண்டு 12 லட்சம் பேருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட உள்ளது….
மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பவர்களிடம் குழந்தைகள் எப்படி பழக வேண்டும் எப்படி தள்ளி நிறக்க வேண்டும் என்ற தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது…. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இந்த கண் பரிசோதனை நடைபெற உள்ளது…
16 ஆம் தேதி காலை ஏதாவது ஒரு பள்ளியில் நான் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறேன்….தமிழ்நாட்டில் 3,702 பேர் இதுவரை கண் தானம் தந்து உள்ளனர்….
போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்கள் மீண்டு வருவதற்கு மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது…. அண்டை மாநிலங்களவை கர்நாடக கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் போதை வஸ்துக்களை தடுப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்….
பள்ளிக்கு அருகாமையில் இது போன்ற போதை விஷயங்கள் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றுதான்…. சென்னையில் சுகாதார சீர்கேடு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் கேள்விக்கு….
சென்னையை சிங்கப்பூர் மாதிரி எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்தாரா??? சுகாதார சீர்கேடு தொடர்பாக கொஞ்சம் கூடும் பேசுவதற்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி… தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு ஒன்றும் கிடையாது… எனப் பேசினார்.