அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…!! மக்களுக்கு அளித்த உறுதி…!!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தாம்பரம் மற்றும் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்..
தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது… பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று தாம்பரம் மற்றும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.. அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மேலும், மழையால் பாதிக்கப்படும் இடங்களை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் 13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுமார் 1 கி.மீ தூரத்திற்கு கட்டப்பட்ட மழைநீர் வடிகால் தடுப்பு சுவர் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு “தாம்பரம் மாநகராட்சியை பொருத்தவரையில் அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் மற்றும் தேவையான உணவு பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. தாம்பரம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் அத்தனை மாநகராட்சிகளிலும் மழை முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு இடங்கள் தயார் நிலையில் உள்ளது ” எனத் தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..