ADVERTISEMENT
மயக்கத்தில் பிரசாரத்தை நிறுத்திய கே.என்.நேரு..! உடல் நலக்குறைவால் கவலை..!!
பாராளுமன்ற தேர்தலில் 4 முனை போட்டி தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் தேர்தலுக்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இன்று அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவு அளிக்கசொல்லி பெரம்பலூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்து வந்தார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கே.என்.நேருக்கு திடீர் மயக்கம் ஏற்ப்பட்டதால் உடனடியாக பிரசாரத்தை நிறுத்திவிட்டு பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி தனது சொந்த காரில் ஏறி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். இதனால் குளித்தலை தொகுதி பிரசார களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் அவரது உடல் நிலை சரியாக வேண்டுகிறார்கள்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.