ஊராட்சிகளில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஊராட்சி மணி – 155340 இலவச எண் அறிவிப்பு – ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி
தமிழகத்தில் உள்ள 12,000-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீர் தெருவிளக்கு சாலை வசதி சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஊராட்சி மணி என்ற உதவி மையத்தின் 155340 இலவச எண்ணை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிமுகம் செய்து வைத்தார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி
ஊராட்சியில் மின்விளக்குகள் இரவு நேரங்களில் வெளியில் பணிக்கு சென்று பாதை நடந்து வரும் மக்களுக்கு தெரு விளக்கு இல்லாவிட்டால் இந்த எண்ணிற்கு அழைக்கும் பொழுது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,
மக்கள் அவர்களது குறைகளை அழைத்து கூறும் பொழுது அது அனைத்தும் பதிவிடப்படும் அதன் மூலம் அவர்களின் குறையை தீர்க்க சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த குறைகளை எளிதாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
மக்களின் அத்தியாவசிய குறைகளை தீர்க்க காலதாமதமாக ஆனாலும் இவ்விடத்தின் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யவும் திட்டம் உதவும்,
மக்கள் குறைகளை நேரடியாக வருகின்ற மையமாக இது உள்ளது, பல துறைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளது நெடுஞ்சாலை துறையாக இருந்தாலும் இந்த துறையாக இருந்தாலும் பாதிப்பு அடைந்தால் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும், இது போன்று ஒவ்வொரு வரக்கூடிய கோரிக்கைகளை தன்மையை பொறுத்து பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஊராட்சி மணி உதவி மையத்தில் பெறப்படும் புகார்கள் மாவட்டம் தோறும் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்களின் புகார்கள் எடுத்துச் செல்லப்பட்டு அதற்கு தீர்வு காணப்படும் எனவும் இந்த புகார்களின் செயல்முறை நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தப்படும் என தெரிவித்தார்,
ஜல் ஜீவன் திட்டத்தை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் காரணத்திற்காக குறை கூறலாம் என்ன குறை இருக்கிறது என்பதை குறிப்பிட்டால் நாங்கள் பதில் சொல்கிறோம்,
ஜல் ஜீவன் திட்டத்தை பொருத்தறுத்த வரை குழாய் பதிப்பதற்கும் மற்றும் குடிநீர் குழாய் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஏற்படுத்த நிதி ஆதாரம் தேவையாக உள்ளது மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி நிலுவையில் உள்ள நிலையில் அவை வரக்கூடிய பட்சத்தில் இந்த ஜல்ஜீவன் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்தார் ,
ஜல்ஜீவன் திட்டத்தை பொறுத்தவரை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசிற்கு மத்திய அரசு குடியரசு தலைவர் மூலம் விருது வழங்கியதாகவும் தெரிவித்தார். இத்தகைய உதவி மையங்கள் மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இலக்காகும் என தெரிவித்தார்.