மீன்வளத்துறை சார்பில் 33 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்
1.கடலில் மீன் பிடிக்கும் பொழுது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
2. தமிழ்நாட்டில் உள்ள பத்தாயிரம் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 75 விழுக்காடு மானியத்தில் 40 ஆயிரம் உயிர் காப்பு சட்டைகள் மொத்தம் நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
3. நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் செலவில் சிறிய மீன் பிடித்து துறைமுகம் அமைக்கப்படும்
4. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு வாடி மற்றும் ரோஸ்மா நகர் ஆகிய மீன் இறங்குதலங்கள் 45 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்தப்படும்.
5. திருவள்ளூர் மாவட்டம் நொச்சிக்குப்பம் திருவாரூர் மாவட்டம் முணங்காடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆகிய மூன்று மீனவர் கிராமங்களில் 23 கோடி செலவில் புதிய மீன் இறங்கு தலங்கள் அமைக்கப்படும்.
6. திருவள்ளூர் மாவட்டம் நொச்சிக்குப்பம் திருவாரூர் மாவட்டம் முணங்காடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆகிய மூன்று மீனவர் கிராமங்களில் 23 கோடி செலவில் புதிய மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.
7. தமிழ்நாட்டின் அன்னை கடல் பகுதியில் குறைந்து வரும் மீன்வளத்தை மேம்படுத்தும் வகையில் மூன்று கோடி ரூபாய் செலவில் கடலில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படும்.
8. திண்டுக்கல் மாவட்டம் மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை மூலம் 80 லட்சம் ரூபாய் செலவில் நடமாடும் மின் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
9. சென்னை மாதவரம் பகுதியில் உள்ள மணலி மற்றும் மாத்தூர் ஏரிகளை சீரமைத்து பொழுதுபோக்கு மீன் பிடிப்புடன் கூடிய சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான சாத்தியகுரு ஆய்வுகள் 10 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
10. சென்னையில் வண்ண மீன் கண்காட்சி மற்றும் மீன் உணவு திருவிழா 50 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்