பள்ளி மாணவர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்..!
தமிழ்நாட்டில் இன்று கோடை விடுமுறைக்கு பின்னர் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி வாசலில் நின்று மாணவர்களை வரவேற்க, கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பூங்கொத்து கொடுத்து வரவேற்றது மட்டுமின்றி, வகுப்பறைக்கு சென்று, பதிவேடு எடுத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி.. மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
கல்வித்துறை அமைச்சரின் இந்த செயல் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post