தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வரும் பகத் பசிலுக்கு இன்று 41வது பிறந்த தினம் இதனையொட்டி திரையுலகினர் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் தமிழில் வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டி தந்தது. மாரி செல்வராஜ் இயத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பேர் நடித்திருந்தனர்.
இதில் பகத் பசில் நடிப்புக்கு தமிழக சினிமா ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்ததோடு, சோஷியல் மீடியாவில் அனைவரும் நெருப்பை பறக்க விட்டு வருகின்றனர். சொல்லப் போன அப்படத்தில் உதயநிதியை மிஞ்சி விட்டார் என்றே சொல்லலாம். இன்றைக்கு அவரது 41வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவருக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில்,
“உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை முறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.
மிகச் சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர். அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்!” என்று மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.
மிகச் சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர். அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்!” என்று மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.