மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு..!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலானது வருகின்ற நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளது…
ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலானது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வருகின்ற நவம்பர் 20ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அன்று பதிவிடப்படும் வாக்குகள் ஆனது நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது.. முதற்கட்ட வாக்குப்பதிவானது நவம்பர் 13ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவானது நவம்பர் 20ம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தல் வாக்குபதிவுகளானது நவம்பர் 23ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் இங்கு எந்த தொகுதியில் யார் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய தகவல் வெளியகதது குறிப்பிடதக்கது