லூசான செல்லூர் ராஜ்..!! மிருகமான மோடி..!! சரமாரியாக விமர்சித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்..!!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸ் லஞ்சம் பெறுகிறது. என்று கூறி வந்த மோடி தற்போது லஞ்ச மோசடியில் சிக்கி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பிரம்மானந்தா, நித்தியானந்தா தொடர்ந்து மோசடி செய்து வந்த நிலையில் அந்த வரிசையில் அடுத்து மோடி இடம் பெற்றுள்ளதாக விமர்சித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இந்த தேர்தலில் உறுதியாக அவர் வெற்றி பெற மாட்டார் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
காமராஜர் கொடுத்த நல்லாட்சி போல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக தெரிவித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி நல்ல ஆட்சி, மு.க.ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்றும் கூறலாம் எனவும் தெரிவித்தார்.
தரமற்ற நிலக்கரியை தமிழகத்திற்கு அதானி கொடுத்து ஆயிரம் கோடி ரூபாயை மோடி ஊழல் செய்துள்ளார். தமிழர்களை மோடி திருடர்கள் என சொல்லுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. பிரதமர் மோடி தப்பித்தவறி சென்னை வந்தால் வேட்டி கட்டிக்கொண்டு வரக்கூடாது.
தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள கூடாது என்றால் பாகிஸ்தானில் பிறந்த அத்வானியை ஏன் இந்தியாவில் துணை பிரதமராக்கினார். இதற்கு அவரால் பதில் சொல்ல முடியுமா..? பிரதமர் மோடி கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு இருக்க சொல்லுங்க.
தமிழர்களை மோடி சீண்டி பார்க்க கூடாது. தமிழர்களை திருடர்கள் என சொல்லும் பிரதமர் மோடியை நான் மனிதனாக எண்ணவில்லை. அவர் ஒரு மிருகம் போல செயல்படுகிறார். எங்களை பொறுத்தவரை எங்களை இழிவு படுத்தினால். நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாறி விட்டார். செல்லுராஜூவை நான் புத்திசாலி என நினைத்தேன். ஆனால் அவர் ஒரு லூசு. செல்லூர் ராஜூ திருந்தவே மாட்டார். என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இவ்வாறே பேசினார்.
அப்போது துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம், எஸ்.ஏ.வாசு உடனிருந்தனர்.
– லோகேஸ்வரி.வெ