இந்த வெயிலுக்கு குளிர்ச்சியான குல்ஃபி பசங்களுக்கு வீட்டிலே செய்து கொடுங்க…
ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. மனிதர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்களுக்கும் ஐஸ்கிரீம் என்பது பிடித்தமான ஒன்றுதான்.
அந்தவகையில் எளிமையான முறையில் அனைவருக்கும் பிடித்தமான சுவையான குல்ஃபி எப்படி வீட்டிலே செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
-
பிரெட்- 3
-
பால் – ஒரு லிட்டர்
-
பாதாம், பிஸ்தா, முந்திரி- தலா 2 ஸ்பூன்
-
குங்குமப்பூ- ஒரு சிட்டிகை
-
சர்க்கரை- 100 கிராம்
-
மில்க்மெய்டு- 50 கிராம்
-
ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை
செய்முறை:
-
முதலில் குங்குமபூவை சிறிது பாலில் ஊறவைக்க வேண்டும்.
-
பின் பிரெட் துண்டுகளை எடுத்து அதனுடைய ஓரங்களை வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
பிறகு அதனை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
-
பின்னர் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
-
ஒரு அடி கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ச்ச வேண்டும்.
-
பால் நன்றாக காய்ந்ததும் அதில் சர்க்கரை, பொடித்த பிரெட் மற்றும் பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி கலவை ஆகியவற்றை ஒன்று ஒன்றாக போட்டு கலக்க வேண்டும்.
-
முன் ஊறவைத்த குங்குமபூவை அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
-
சிறிது ஏலக்காய் தூள் மற்றும் மில்க்மெய்டு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலந்ததும் அந்த கலவை கெட்டியாக மாறும் அந்த நேரத்தில் அடிப்பில் இருந்து இறக்கிவிட்டு ஒரு டம்பளரில் ஊற்றி அதில் குச்சி வைத்து ஒரு 6 மணிநேரத்திற்கு ஃப்ரிட்ஜில் ஃபிரீசரில் வைக்க வேண்டும்.
-
6 மணி நேரம் கழித்து பார்தால் குல்ஃபி ரெடி ஆகிவிடும் சாப்பிடலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.