கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்து வைத்த கிருத்திகா உதயநிதி..!!
கர்ப்பிணிகள் உடல் நலம் மற்றும் மனநலனை பாதுகாக்க வேண்டும் என சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிருத்திகா உதயநிதி வலியுறுத்தினார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கிருக்திகா உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையில் பேசிய கிருத்திகா, கர்பாலாத்தில் மனநலன் மற்றும் உடல் நலன் பேணுவது முக்கியம் என கூறினார்.
பின்னர் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கும் மாலை மற்றும் வளையல் அணிவித்து, பழங்கள், சத்துமாவு , புடவை அடங்கிய சீர்வரிசை தட்டு வழங்கினார்.
Discussion about this post