கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி, இவரது மகனான சுபாஷ் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பணிபுரியும் இடத்தில் வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தண்டபாணி தந்திரமாக மகன் மற்றும் மருமகளை வீட்டிற்கு அழைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி வீட்டிற்கு வந்த இருவரையும் தண்டபாணி அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது அதனை தடுக்க முயன்ற அவருடைய அம்மா கண்ணம்மாளையும் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தில் 22 வயதான சுபாஷிம், அவரது பாட்டியும், தண்டபாணியின் அம்மாவான கண்ணம்மாளும் (65) சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் சுபாஷின் மனைவி அனுசுயா படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிபதி அமர் ஆனந்த். உயிருக்கு போராடும் நிலையில் உள்ள அனுசுயாவிடம். மரண வாக்குமூலத்தை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் ஊத்தங்கரை டிஎஸ்பி அமல அட்வின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.