“குழந்தைகளுக்கு பிடித்த ரிப்பன் பக்கோடா..” இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!!
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால், நிறைய பேர் தங்கள் வீடுகளில் என்னென்ன பலகாரம் செய்யலாம் என்று. யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா..?
சிம்பிளாகவும், அதே சமயம் சுவையாகவும் நிறைய கார வகைகளை செய்ய விரும்புகிறீர்களா..?
அப்படியானால் இந்த ரிப்பன் பக்கோடாவை செய்து பாருங்க அட்டகாசமா இருக்கும்
ரிப்பன் பக்கோடா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மொறுமொறுவென்று சுவையாகவும் இருக்கும்.
உங்களுக்கு ரிப்பன் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா..? கீழே ரிப்பன் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* அரிசி மாவு – 1 கப்
* கடலை மாவு – 1/4 கப்
* பொட்டுக்கடலை மாவு – 1/4 கப்
* உப்பு – 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
* எள்ளு – 1 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் – 1 கப்
* எண்ணெய் – பொரிப்பதற்கு
தேவையான அளவு செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் 1/4 கப் கடலை மாவை சலித்து சேர்க்க வேண்டும்.
அதன் பின் 1/4 கப் பொட்டுக்கடலை மாவை சேர்க்க வேண்டும். பின்பு அதில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, அதன் பின் எள்ளு விதைகளை கைகளால் கசக்கி சேர்க்க வேண்டும்.
பிறகு சூடான எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி, கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும். பின் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் நன்கு பிசைந்து கிளறி விட வேண்டும்.
அதன் பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, மிகவும் இறுக்கமாக இல்லாமல், ஓரளவு இறுக்கமாக, அதே சமயம் மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
பின்பு முறுக்கு உழக்கை எடுத்து, அதில் ரிப்பன் பக்கோடா அச்சை வைத்து, பின் பிசைந்த மாவை வைத்து, எண்ணெயில் நேரடியாக பிழிந்துவிட்டு, பொரித்து எடுத்தால், சுவையான ரிப்பன் பக்கோடா தயார். செய்து பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க
கவிப்பிரியா