30 வயது பெண்களை தாக்கும் சிறுநீரக தொற்று..! பெண்களே உஷார்..!!
30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு சிறுநீரக நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது, இதற்கு காரணம் குறித்து ஆய்வு நடத்தியபோது சில முக்கியமான காரணங்களை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அது குறித்து பார்க்கலாம்.
* ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சில தவறான உணவு பழக்கங்கள் மரபியல் ரீதியான பிரச்சனைகள் போன்றவற்றால் பெண்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படும் என்று சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் கூறியுள்ளார்.
* இதன் அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் வலி, சிறுநீரில் ரத்தம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது இந்த பிரச்சனைகள் இருந்தால் உங்களுக்கு சிறுநீர் தொற்று நோய் உள்ளது.
* சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவேண்டும், மற்றும் உடல்பருமன், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்தால் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம்.
* சிறுநீர் பாதை தொற்றில் ஏற்படும் பிரச்சனை சிறுநீரகம் வரை பாதிக்கும். அதாவது இடுப்புவலி, சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கும். இந்த பிரச்சனை ஏற்படும் பொழுது ஆண்டிபயாட்டிக் மருந்துகள் மூலம் இதை குணப்படுத்தலாம்.
* இதை சரியான சமயத்தில் கவனிக்காமல் இருந்தால், நாளடைவில் இது கட்டிகளை உருவாக்கும். அடிவயிற்றில் ஏற்படும் வலி, உயர் ரத்த அழுத்தம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். இந்த பிரச்சனைகள் ஏற்பட்ட உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.
* இதற்கான முக்கியகாரணம் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும், ஹைப்பர்டென்ஷன் மற்றும் மனஅழுத்தம் தான், உயர் ரத்த அழுத்தமானது சிறுநீரகத்தை சரியாக செயல்படுத்த விடாது. இதில் நீரிழிவு நோயும் ஏற்படுவதால், நாளடைவில் சிறுநீரகத்தை செயல் இழக்க செய்துவிடும்.
* இதை தடுக்க தினமும் ஆரோக்கியமான நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சி, செய்ய வேண்டும்.
* புகைபழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இருந்தால் உடனே விட்டுவிட வேண்டும். அவ்வப்போது மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..