ஜீ தமிழ் தொலைகாட்சியில் சரிகமப நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என்று தனித்தனியாக நிகழ்ச்சிகள் நடைபெறுவது வாடிக்கை. சமீபத்தில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதில், எதிர்பார்த்தது போலவே திவினேஷ் வெற்றி பெற்று இருந்தார். திவினேஷ் பாடல்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தோ, அதேபோல யோகஸ்ரீயும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இறுதியாக தேர்வு சய்யப்பட்ட 6 போட்டியாளர்களில் யோகஸ்ரீயும் இடம் பெற்றிருந்தார்.
யோக ஸ்ரீயின் தந்தை வறுமை காரணமாக டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். பிரபல டைல்ஸ் நிறுவனம் யோகஸ்ரீயின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் பாட்னர்ஷிப் கொடுத்திருந்தது. இதனால், குடும்பத்தில் இப்போது வறுமை விலக தொடங்கியுள்ளது. யோகஸ்ரீ ஓலை வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார். மிகவும் இடிந்த நிலையில் இருந்த வீட்டில் தான் யோகஸ்ரீயின் தாத்தா பாட்டி உட்பட கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து, நாமக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் அவருக்கு சிறிய வீட்டையும் கட்டிக் கொடுத்துள்ளார். இப்படி, சரிகமப நிகழ்ச்சியில் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் பட்டம் வெல்ல முடியாதது யோகஸ்ரீயை புரட்டி போட்டு விட்டது.
சரிகமகப நிகழ்ச்சியில் திவினேஷ் முதல் பரிசை தட்டி சென்றதால், யோனஸ்ரீ மனமுடைந்து அழுதார். அவரை, தொகுப்பாளர் அர்ச்சனா தேற்றினார். எனினும், அவருக்கு சினிமாவில் பாட தேவா உள்ளிட்ட சில இசையமைப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர்.