கலாஷேத்ரா கல்லூரி பாலியல் வழக்கு விசாரணை..! குற்றப்பத்திரிகையை தயார் செய்த அடையார் மகளிர் காவல்துறை..!!
கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் வழக்கை விசாரணை செய்த அடையார் மகளிர் போலீசார் குற்றப்பத்திரிக்கையை தயார் செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாதம் முழுவதுமாக காலஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு.., அதே கல்லூரியில் இருக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவர்கள் புகார் அளித்தும். ஆசிரியர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதனை தொடருந்து 2019ம் ஆண்டு அந்த கல்லூரியில் படிக்கும் முன்னாள் மாணவி அளித்த புகாரின் பெயரில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஹரிபத்மன் மீது, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 60 நாட்களுக்கும் மேல் சிறையில் இருந்ததை தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது. அதன் பெயரில் தினந்தோறும் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் நேரடியாக நடத்தப்பட்ட விசாரணையில் நடத்திய மகளிர் காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.., இன்னும் ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை ஆனது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பெயரில் ஒரு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்.., விசாரணைக்கு பின்னரே அனைத்து தகவல்களும் வெளிவரும் எனவும் அடையார் மகளிர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.