பிரச்சனைகள் தீர வீட்டில் இதை செய்தாலே போதும்..!
நமக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனை தீர இறை வழிபாடு மேற்கொள்வோம். அப்படியாக இறை வழிபாட்டில் மிக முக்கியமாக கருதுவது தீபம் ஏற்றி வழிபாடு செய்வது தான்.
மேலும் ஒருவர் வீட்டில் என்ன பிரச்சனையாக இருந்தாலும், அதை நாம் வீட்டில் இறைவனை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அது உடனே தீர்ந்து போயிவிடும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் வாஸ்து சரியின்மையால் ஏற்படும் பிரச்சனைகளை நம் எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். பொதுவாக வீடு, நிலம், வாசல் போன்ற அனைத்திற்கும் செவ்வாய் பகவானே உரியவராக திகழ்கிறார்.
செவ்வாய் பகவானிற்குரிய கிழமையாக செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. அதனால் இந்த தீபத்தை செவ்வாய்க்கிழமை அன்று ஏற்ற வேண்டும். நம் வீடுகளில் கட்டாயம் மண் இருக்கும்.
அப்படி இருக்க ஒருவர் வீட்டில் வாஸ்து பிரச்சனை ஏற்பட்டால் வீட்டில் இருக்கும் மண்ணை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அதை பூஜை அறையில் வட்டமாக பரப்பி அந்த மண் மேல் அகல் விளக்கு வைத்து நெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு தீபம் ஏற்றிய பிறகு வாஸ்து பிரச்சனைக்கு உரிய மந்திரம் சொல்ல வேண்டும்.
மந்திரம் :
” ஓம் தத்புருஷாய வித்மஹே பூமி புத்ராய தீமஹி தன்னோ வாஸ்து பிரசோதயாத்”
இந்த மந்திரம் சொல்லி வழிபட வீட்டில் உள்ள அனைத்து வாஸ்து பிரச்னையும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை தோறும் மந்திரங்கள் சொல்லி விளக்கு ஏற்றி வர சகல நன்மைகளும் இறைவன் அருளிச்செய்வார் என்பது நம்பிக்கை.
– லோகேஸ்வரி.வெ