சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிகள் இறுதி விசாரணை..! ஜாமீன் மனு..?
தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி எ ல்லைக்குள் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கர் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உட்பட 4 பேர் மீது பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் 7 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அப்போது கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை 2 நாட்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இரண்டு நாட்கள் சவுக்கு சங்கரை தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து கஞ்சா வழக்கில் 2ம் முறையாக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் ஜீன் 5 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டிருந்தார்..
நீதிபதியின் உத்தரவின் பெயரில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். அப்போது நீதிபதி முன் பேசிய அவர்.., தன்னை யாரும் துன்புறுத்தவில்லை என சவுக்கு சங்கர் கூறினார். அதன் பின் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு வழக்கு வருகின்ற 27ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி அவருடைய தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து ஆவணங்களும் மதியம் 2.15 நிமிடங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு வழக்கின் விசாரணை நேற்று மதியம் 2.15 வரை ஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பிறகு இன்று காலை மீண்டு விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் இடையே மாறுபட்ட கருத்து நிலவுவதால் மூன்றாவது நீதிபதி அமர்த்தப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வரை ஒருமையில் பேசிய விவகாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன் இன்று இறுதி விசாரணை நடத்தலாமா என்ற விஷயத்தில் தான் நீதிபதிகளிடையே மாறுபட்ட கருத்து நிலவியுள்ளது.
தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இந்த வழக்கில் இறுதி விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி பாலாஜி கூற, தமிழக அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படாவிட்டாலும் இன்றே இறுதி விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி சுவாமிநாதன் கூற, இறுதியில் இன்று மாலை 6 மணி வரை சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
– லோகேஸ்வரி. வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..