ஜப்பானில் அதன் தலைநகரைவிட்டு வெளியேறும் ஒரு ஒருவருக்கும் 1 மில்லியன் யென் வழங்கப்படும் ன்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகநாடுகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வருடந்தோறும் உலகளவில் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை 800 மில்லியன் என்ற இலக்கை எட்டியது. இதனால் வருங்காலத்தில் பற்றாக்குறைகள் ஏற்படலாம் என்று ஆராட்சியாளர்கள் தொடர்ந்து வலியுருத்தி வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஜப்பான் நாடு தனது தலைநகர் டோக்கியோவில் மக்கள் நெருக்கத்தை குறைக்க புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, டோக்கியோவில் இருந்து வெளியேறும் ஒரு குழந்தைக்கு ஜப்பான் மதிப்பில் 1 மில்லியன் யென் அதாவது இந்தியா ருபாய் மதிப்பில் 6,33,000 வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் டோக்கியோவிலிருந்து வெளியேறினால் அந்த குடும்பத்திற்கு 3 மில்லியன் யென் வழங்கப்டு என்று தெரிவித்துள்ளது. மேலும் வெளியேறும் குடும்பம் குறைந்தது 5 ஆண்டுகள் அந்த பகுதியில் வாழ வேண்டும் என்றும் அந்த பணத்தை வைத்து புதிய தொழில் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் 5 ஆண்டுகள் வாழ இயலாத சூழல் ஏற்பட்டால் அரசாங்கம் கொடுத்த பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.