திருப்பூரில் அரசு அனுமதி இன்றி சிறப்பு காட்சிகள் வெளியிட்ட தியேட்டருக்கு நோட்டீஸ்!!
திருப்பூரில் தீபாவளி அன்று அரசு அனுமதி இன்றி சிறப்பு காட்சிகள் வெளியிட்ட திரையரங்க உரிமையாளர் சங்க தலைவரின் தியேட்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் யூனியன் மெயின் ரோட்டில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியத்திற்கு சொந்தமான மல்டிபிளக்ஸ் திரையரங்கு உள்ளது.
இங்கு தீபாவளி அன்று அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் , அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக ஆறு காட்சிகள் வெளியிட்டு இருப்பது தெரிய வந்தது.
அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக திரையிடப்பட்டதுக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு தியேட்டரில் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அந்த விளக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)