இனி யாரும் சென்னை ரோட்டுல போகவே முடியாது போலயே..!!
சென்னையில் வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
ஆட்டோக்கள் பகல் 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்திலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கனரக வாகனங்கள் பகலில் மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் இரவில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பகல் 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ள நிலயில் வேகவரம்பை மீறி செல்லும், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு 1,000 அபராதம் கனரக வாகனங்களுக்கு 2000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..