தளபதியை அரியணையில் அமரச் செய்வது என்னுடைய நோக்கம் அல்ல…!! தவெக அஜிதா ஆக்னல் பேச்சு…!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போன்று பெண்கள் அரசியலில் வலம் வர வேண்டும் தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பேச்சு.
தமிழக வெற்றிக்கழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த 300 பெண்கள் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னலுக்கு சால்வை அணிவித்து தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக அஜிதா ஆக்னல் அறிவிக்கப்பட்டதிலிருந்து கட்சி பணிகளை தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த 300 மகளிர்கள் இணையும் நிகழ்ச்சி தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜித் ஆக்னல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெஸ்ட் என்பவர் தலைமையில் தூத் மாநகரில் 180 பெண்கள் உட்பட திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் 120 பெண்கள் என மொத்தம் 300 பெண்கள் இன்று தங்களை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.இதைத் தொடர்ந்து கட்சியில் இணைந்த பெண்களுக்கு தமிழக வெற்றிக்கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், பெண் விடுதலை இல்லையெனில் மண் விடுதலை இல்லை என கூறிய அவர், சமத்துவம் என்பது ஆண்கள் மட்டுமல்ல அவர்களுக்கு நிகராக பெண்களையும் உயர்த்துவது தான் ஆகும் நம் நாட்டின் குறிப்பாக அரசியல் கட்சிகளில் சமதம் போற்றப்படுகிறதா என்பது ஒரு கேள்விக்குறி பெண்கள் பொதுவாகவே ஆண்மை திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள் குறிப்பாக சொல்லப்போனால் இதற்கு பல சாட்சிகள் உண்டு விண்வெளி துறையில் கல்பனா சாவ்லா இருக்கட்டும்,
முதல் அரசியல் அம்மையார் இந்திரா காந்தி அம்மையாராக இருக்கட்டும், அம்மையார் ஜெயலலிதா, மதிப்பிற்குரிய மம்தா பானர்ஜியாக இருக்கட்டும் மாயாவதி போன்றவர்களை குறிப்பிட்டு காரணம் காட்டலாம் இவர்கள் அனைவரும் காலம் மற்றும் சூழ்நிலை பாராமல் பெண்களது விடுதலைக்காக போரிட்டவர்கள் அதற்காக தனது வாழ்வினை அர்ப்பணித்து நம்மைப் போன்ற பெண்களுக்கு ஒரு ஊக்கமாக நமக்கு முன் உதாரணமாக திகழ்கின்றவர்கள்.
நமது தமிழக வெற்றிக் கழகத்தில் சம வாய்ப்பு சம உரிமை என்ற கோட்பாட்டை சமத்துவத்தை நிலை நாட்டுகிற ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கின்றது அதற்கு சாட்சியாகவே நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் என்றார் இன்று பல துறைகளிலும் குறிப்பாக சொல்லப் போனால் வணிக துறையாக இருக்கட்டும் அல்லதுஆளுமை துறைகளாக இருக்கட்டும் பெண்களின் மதிப்பு நிறைய இடங்களில் வெளிப்பட்டு வருகிறது.
ஆனால் அரசியல் துறை என்பது சில பெண்களே அதில் இடம்பெறுகிறார்கள் ஆனால் நமது தமிழக வெற்றி கழகத்தில் சம வாய்ப்பு சம உரிமை மூலம் நமது தளபதி யார் நமக்கு ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாய்ப்பு அளித்திருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் என்றார்.
ஒரு பெண் தலைமை பொறுப்பில் இருந்தால் நற்செயல்கள் மலர்ந்திடும் என்ற நம்பிக்கையை நாம் விதைக்க வேண்டும் உங்களுக்கு இந்த நிகழ்ச்சி தொகுப்பானது எனும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு இணைந்து இருக்கின்ற இந்த மகளிர் குழுக்கள் தொழில் முனைவதற்கு மட்டுமல்ல நம்மிடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடிய மகளிர்களாக நாம் ஒவ்வொருவரும் உருவாக வேண்டும் என்றார்.
ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அரசியல் சாம்ராஜ்யத்தையே நடத்தி முடித்து விட்டு போய் இருக்கிறார்கள் என்றார். பெண்கள் அனைவருக்கும் அவர் ஒரு முன் உதாரணமாக இருக்கிறார் என்றார். அந்த வழியில் நாம் ஒவ்வொருவரும் நம் குடும்பத்திற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே மாதிரி அரசியல் கட்சிகளில் வலம் வர வேண்டும் என்றார்.
சட்டமன்றமாக இருக்கட்டும் பாராளுமன்றமாக இருக்கட்டும் பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம் ஆனால் நமது தளபதியார் ஆட்சி மாற்றத்தை மட்டுமல்ல பெண்களுக்கான பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கிறார் என்பதை இந்த இடத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பெண்கள் நாம் அனைவரும் எழுந்து நின்று மாற்றத்தை உருவாக்கப் போராட வேண்டும் என்றார். மாற்றத்தை முதலில் குடும்பத்தில் உருவாக்க வேண்டும் அதன் பிறகு தெருவில் மாற்றம் வரும் அதன் பிறகு ஊரில் ஒரு மாற்றம் வரும் கண்டிப்பாக 234 தொகுதிகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நான் மட்டுமல்ல நீங்கள் அனைவரும் நிற்க வேண்டும் என்றார்.
வருகிற 2026 இல் நம்முடைய தளபதியாரை அரியணையில் அமரச் செய்வது என்னுடைய நோக்கம் அல்ல உங்களுடைய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை நான் மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.