சந்திரன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவற்றிற்கு பயணம் செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 3-வது நிலவு பயணமான ‘சந்திரயான்-3’ நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனைத்தொடர்ந்து சூரியன் ஆய்வுப்பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
“பிரதமர் மோடி முன்வைத்த தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற இஸ்ரோ தயாராக உள்ளது. சந்திரன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவற்றிற்கு பயணம் செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால் நாம் நமது நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். இஸ்ரோவிற்கு அதிக முதலீடு தேவை. விண்வெளித் துறை வளர்ச்சியடைய வேண்டும். இதன் மூலம், முழு ஒட்டுமொத்த தேசமும் வளர்ச்சியடைய வேண்டும். அதுதான் எங்கள் நோக்கம். பெரும்பாலான அறிவியல் நோக்கங்கள் நிறைவேறப் போகிறது. அடுத்து வரும் 13-14 நாட்கள் முக்கியமானவை. அந்த நாட்களை நாங்கள் உற்சாகமாக எதிர்பார்க்கிறோம். நிலவில் இருந்து நிறைய தரவுகளை அளிப்போம். அப்படி செய்யும் போது அறிவியலில் ஒரு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம் என்று நம்புகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.