ஆளுநர் அரசியல்வாதியை போல செயல்படுகிறாரா..! அமைச்சர் பொன் முடி..?
பல்கலை கழகங்களில் காலியாக இருக்கும் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்பு வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
துணை வேந்தர்கள் இல்லாமல் சில பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதால், துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை சீக்கிரம் தொடங்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்திருக்கிறார்.
சென்னையில் நடந்த பல்கலைகழக நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியா ஆளுநர் ஆர்.என்.ரவி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையில் சிண்டிகேட், செனட் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாக அமைப்பு சார்ந்த கூட்டங்கள்.., இனி பல்கலைக்கழக கூட்டங்களில் நடைபெற வேண்டும் எனவும், பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு தேர்வுகளை யு.ஜி.சி முறைக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ரவி அரசியல்வாதியை போல செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். எல்லாமே நான் தான் என்ற எண்ணத்தில் அவர் செயல்பட்டு வருகிறார். அரசியல்வாதிகள் என்ன மாதிரியான அறிக்கைகள் வெளியிடுவார்களோ அது மாதிரியான அறிக்கையை தான் தற்போது ஆளுநர் வெளியிட்டு கொண்டு வருகிறார்.
ஆனால் அவர் வெளியிடும் அறிக்கைகள் எல்லாம் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது, முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த அறிக்கை வெளியிட்டாலும், எந்த செயல் செய்தாலும் சட்ட வல்லுநர்களை ஆலோசித்து தான் செய்வார், ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் எந்த செயலையும், வெளியிடும் அறிக்கைகளையும் சட்ட வல்லுநர்களை ஆலோசிக்காமல் செய்து கொண்டு வருகிறார்.
என செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, ஆளுனர் ஆர்.என்.ரவி மீதான குற்றங்களை முன் வைத்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி பேசிய இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகியுள்ளது.., பல்கலைக்கழகங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கைகள் அமலுக்கு வருமா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு சிலர் இந்த அறிக்கை அமலுக்கு வர வேண்டும் என்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவு தெரிவித்தும்.., அவருக்காக செயலாற்றியும் வருகின்றனர்.