தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. ஆகையால் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஆந்திரா – வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வர உள்ளது.
இதனால், தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை மழை தொடரும் என்று அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை, ஆந்திரா, இலங்கை, வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமி வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாவும். அவ்வப்போது 65 கிமீ வரை காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேணடாம் என்று அறிவித்துள்ளது.
இதனிடையே வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை நோக்கி நகர்க்காதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்கும் என்று தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை அடுத்து, சென்னை, புதுச்சேரி,காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, எண்ணூர், ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Discussion about this post