நீட் தேர்வில் மாணவர்கள் உயிர் இழப்புக்கு இவர் தான் காரணமா…?
வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு மாவட்டங்களில் திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸிற்கு ஆதாரவாக பேசி வாக்குகள் திரட்டி வருகின்றனர்.
நேற்று திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மதிமுக துரைவைகோவிற்கு ஆதாரவாக பேசி வாக்குகள் சேகரித்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டத்தில் வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
தேனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அதில் மக்களின் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. தேனி தொகுதியில் போட்டியிடும் நம் தமிழ் செல்வனை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து ஒரு புதுவித மாற்றத்தை நம் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும்.
கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு என்ன செய்திருக்கிறார். தமிழ்நாட்டின் மாணவர்கள் படிக்கக் கூடாது என்பதற்காக புதிய கல்விக் கொள்கைகளை ஒன்றிய அரசு கொண்டு வந்து மாணவர்களின் கல்வி கனவை சிதைத்தார்.
நீட் தேர்வை தமிழகத்திற்கு கொண்டு வந்து 21 மாணவர்களின் உயிர் இழப்பிற்கு காரணமானர். அவர்களின் மரணத்திற்க்கு பாஜக அரசும் அதற்கு துணை நின்ற அதிமுக அரசும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
என் தாத்தா கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அம்மையார் இருந்த வரை நீட் தமிழகத்திற்குள் நுழையவிட்டதில்லை.., ஆனால் தற்போது நீட் நுழைய என்ன காரணம்…? இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.
தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியிலும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
வருகின்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்று கலைஞருக்கு பிறந்தநாள் பரிசு அளிக்க வேண்டும் எங்களை வெற்றி பெற செய்தால் மாதத்தில் இருமுறை நான் தேனியில் வந்து தங்குவேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.