இந்திய கடற்படையில் ஏற்கனவே இருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த 1997-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றது. அதன் பின்னர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டது. மொத்தம் 20,000 கோடி செலவில் 14 மாடி உயரத்துக்கு இந்த கப்பல் பிரமாண்டமாக கட்டடப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை மிதக்கும் போர்க்களம் என்றே கூறலாம். இரண்டுகால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு பெரியது. 5,000 வீடுகளை சப்ளை செய்யப்படும் தேவையான மின்சாரத்தை இந்த கப்பலால் உற்பத்தி செய்ய முடியும். இந்த கப்பலை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ள இந்த கப்பலில் மிக்-29கே ரக விமானங்கள் காமோவ்-31 ரக ஹெலிகாப்டர்கள் எம்.எச். 60ஆர் ஹெலிகாப்டர்கள் என மொத்தம் 36 போர் விமானங்கள் உள்ளன.
இந்த கப்பல் அதிகபட்சமாக 7,500 நாட்டிக்கல் மைல் தூரம் வரை தொடர்ந்து செல்லும் திறன் படைத்தது. 43,000 டன் எடையுள்ள இந்த கப்பலில், பயன்படுத்தப்பட்டுள்ள மின் வயர்களின் மொத்த நீளம் 2,500 கிலோ மீட்டர் ஆகும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்த வயர்களை கொண்டு இணைக்க முடியும். 1,700 வீரர் வீரங்கனைகள் இந்த கப்பலில் பணியில் உள்ளனர். இதில் மொத்தம் 2,300 அறைகள் உள்ளன. இந்த கப்பல் மூலம் கடலில் வெகு தொலைவில் இருந்து வான் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். இந்திய பெருங்கடல் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
அத்தகைய பிரமாண்ட கப்பலைத்தான் இப்போது, இந்திய கடற்படை கராச்சியில் இருந்து 700 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் நிறுத்தி வைத்துள்ளது. இந்திய அரசு போர் என்று முடிவெடுத்து விட்டால், முதலிக் கராச்சியைத்தான் தாக்கும்.எனவே, கராச்சிக்கு மிக நெருக்கமாக விக்ராந்த் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த நாட்டுக்கு ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சிந்துநதியை காய வைத்தது, பொருளாதார நெருக்கடி என பல பிரச்னைகளில் பாகிஸ்தான் சிக்கியிருக்கிறது.
பாகிஸ்தானின் 70 சதவிகித வர்த்தகம் 80 சதவிகித ஆயில் இறக்குமதி கராச்சி துறைமுகம் வழியாகவே நடந்து வருகிறது. இதனால், பாகிஸ்தானுக்கு சிக்கல்தான். பொதுவாக விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டால், அதன் கீழே நீர்மூழ்கிக் கப்பலும் இருக்கும். அந்த வகையில், கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பலும் அங்கே நிலை கொண்டுள்ளது. கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் பொதுவாக துறைமுகங்களின் கட்டுமானங்களை சிதைக்கும் வல்லமை கொண்டவை. எனவே, கராச்சி மற்றும் பாகிஸ்தானின் மற்றொரு துறைமுகமான பலுசிஸ்தானிலுள்ள கவ்தார் நகரையும் தாக்கும் நோக்கில் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் விக்ராந்துடன் இணைந்து செயல்படவுள்ளது. இந்த ரக நீர்மூழ்கிக்கப்பல்களை கண்டறிவது கடிதம். 20 நாட்களுக்கு மேல் நீருக்கு மேல் வராமல் அடியிலேயே பயணிக்கும் திறன் கொண்டது.
அதோடு, தல்வார் கிளாஸ் போர்க்கப்பல்களும் விக்ராந்துடன் இணைந்துள்ளன. இந்த கப்பலில் 8 பிரமோஸ் ஏவுகணைகள் உள்ளள. இந்த ஏவுகணை 300 கிலோ எடை வெடிபொருள்களுடன் 450 கி.மி தொலைவு சென்று துல்லியமாக இலக்கை அட்டாக் செய்யும். ஐ.என்.எஸ். விக்ராந்த், கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல், தல்வார் கிளாஸ் போர்க்கப்பல்களுக்கு பாராக் 8 ரக ஏவுகணைகள் பாதுகாப்பாக இருக்கும். இந்த ஏவுகணைகள் நம்மை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை வானிலே தாக்கி அழித்து விடும். எனவே, இந்தியா தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானால் திருப்பி அடித்து விடுவது என்தெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. தற்போதைக்கு , பாகிஸ்தானின் துறைமுகங்களை தாக்கி வர்த்தகத்தை முடக்குவது இந்திய ராணுவத்தின் நோக்கமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.