அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்த விபத்தில் 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் மாண்டலே மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவத்தினர் தேடல் வேட்டையை தொடங்கினர். ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள், 3 ராணுவ அதிகாரிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.
“அருணாச்சலப் பிரதேசத்தின் போண்டிலாவில் சீட்டா ஹெலிகாப்டருக்கும் ஏடிசிக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. காலை 9.15 மணிக்கு எங்கள் தொடர்பை இழந்தோம். மண்டலா மலையில் விபத்துக்குள்ளானதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தேடுதல் பணியைத் தொடர்கிறோம்” என கர்னல் மகேந்திர ராவத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரை இயக்கிய 2 பைலட்டுகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.