கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலங்களவையில் இனிதாவை உலக கால்பந்து போட்டிகளில் சாம்பியன்சாக்க ஒன்றிய அரசு பல திட்டங்களை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை நடந்து முடிந்துள்ள நிலையில் மாநிலங்களவையில் இந்தியாவை கால் பந்து போட்டிகளில் உயர்த்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கேட்கபட்டது அதற்கு பதிலளித்துள்ள இந்திய விளையாட்டு துறை அமைச்சகம், கால்பந்து போட்டிகள் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது, அடுத்த வரவிருக்கும் உலக கால்பந்து தொடர்கள் மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை பங்கு பெற செய்வதற்கான பொறுப்புகள் இந்தியா கால்பந்து சம்மேளனத்திடம் உள்ளது. ஒன்றிய அரசு இந்த அமைப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்து உதவி வருகிறது என்று எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளது.
மேலும் அந்த பதிலில், இந்தியாவில் கால்பந்து விளையாட்டு முன்னுரிமை பிரிவில் தான் இருக்கிறது, இந்தியாவில் இந்த விளையாட்டை மேம்படுத்துவதற்க்காக அந்த விளையாட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்கவும், தேசிய கால்பந்து விளையாட்டுகள் நடத்துவதற்கும் மேட்டரும் இந்தியா கால்பந்து அணிக்கு சர்வேதச கால்பந்து பயிற்சயாளர்கள் வழங்குவதற்கும் அவர்கள் மூலம் உரிய பயிற்சிகள் மற்றும் , அறிவியல் ரீதியிலான யோசனைகளை வழங்குவது உள்ளிட்டவற்றை ஒன்றியஅரசு மேற்கொண்டு வருகிறது என்று இந்திய விளையாட்டு துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.