6ஜி தொழில் நுட்பத்தில் இந்தியா..!! பிரதமர் மோடி சொன்ன அந்த வார்த்தை..?
உலகளவில் 6ஜி தொழில் நுட்பத்தில் இந்தியா தலைமை வகிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய மொபைல் காங்கிரஸின் 7வது பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் ஆகாஷ் அம்பானி, தொலைத் தொடர்பு துறையில் தனது நிறுவனம் செய்து வரும் பணிகளை பிரதமரிடம் விளக்கினார்.
உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாட்டாளர், உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 5ஜி சேவையை நாடு முழுவதும் விரிவு படுத்துவதுடன், 6ஜி தொழில்நுட்பத்தில் தலைமை பதவியை நோக்கிய திசையில் நகர்ந்து வருவதாக தெரிவித்தார்.
பாஜக உலகளவில் 6ஜி தொழில் நுட்பத்தில் இந்தியா தலைமை வகிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த அவர், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவது பெருமை அளிப்பதாக கூறினார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..