காஷ்மீரில் பஹால்கம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, சிந்து நதி ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து ஒரு துரும்பை கூட இறக்குமதி செய்ய கூடாது என்கிற முடிவை இந்தியா எடுத்துள்ளது. நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியே அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும், மறு உத்தரவு வரும் வரை உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடைக்கு விதிவிலக்கு பெற இந்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும்” என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே , அட்டாரி வாகா பார்டர் மூடப்பட்டு விட்டதால் தரை வழியாக இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்ததகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலின் போது, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 200 சதவிகிதம் வரி விதித்தது. இதனால், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் முற்றிலும் குறைந்து போனது.
பொதுவாக, பாகிஸ்தான் இந்தியாவுக்கு உலர் பழங்கள், விதைகள், பார்மா போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.