அரியலூர் மாவட்டத்தில் தினமலர் நாளிதழை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!!
அரியலூர் மாவட்ட திமுக சார்பில் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா தலைமையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கொச்சைபடுத்திய தினமலர் நாளிதழை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம், ஈரோடு பதிப்பு, தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில், ‘காலை உணவு திட்டம்; மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது எனும் தலைப்பில் செய்தி வெளியானது.
இதனை கண்டித்து அரியலூரில் காலை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, நகர செயலாளர் முருகேசன் மாநில பொதுகுழு உறுப்பினர் பாலு ஆகியோருடன் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தினமலர் நாளிதழை எரித்து தினமலர் நிர்வாகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..