பெண்குழந்தை பிறந்தால் 111 மரக்கன்று நடும் கிராமம்..!! பெண்குழந்தைகளுக்கு முதல் இடம்..!
பெண்குழந்தை பிறந்தால் இன்றும் ஒரு சிலர் வரமாக நினைக்காமல் சாபமாக நினைக்கின்றார்கள். ஒரு சிலர் கள்ளிப்பால் ஊற்றி கொள்ளுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.., என்னதான் பெண் குழந்தை இருந்தாலும் ஆண் பிள்ளைக்கு நிகர் இல்லை என்று சொல்லுபவர்களும் உண்டு.
இப்படி இருப்பவர்களுக்கு மத்தியில்.., பெண் குழந்தை பிறப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும். பெண்களை வணங்கும் ஒரு கிராமம் இருக்கிறது என்று சொன்னால்.. நம்மால் நம்ப முடியுமா..? நம்புங்கள் அப்படி ஒரு கிராமம் இருக்கிறது.
ராஜஸ்தானில் உள்ள பிப்லாந்த்ரி கிராமாம் பெண் குழந்தையை கொண்டாடுகிறது. பெண்குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகளை நட்டு வைப்பதை வழக்கமாக வைத்துருகின்றனர்.., இதனால் இயற்கையும் வளரும்.. இயற்கையை போலவே பிள்ளைகளும் வளருவார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.
பெண் குழந்தை பிறக்கும் பொழுதே அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து.., 10,000 ரூபாயும். நன்கொடையாக கிராம மக்கள் 30,000 ஆயிரம் ரூபாயும் குழந்தையின் வங்கி கணக்கில் வைப்பு தொகையாக செலுத்தி விடுவார்களாம்.
அது அவர்கள் வளர்ந்த பின் அவர்களின் கல்விக்கு பெரிதும் உதவும்.. என்றும் கூறுகின்றனர். இந்த அனைத்து செயல்முறைகளையும் கிராம பஞ்சாயத்து கவனிக்கிறது. இந்த கிராமத்தில் இவர்கள் செய்யும் செயல்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுபோன்ற செயல்கள் நம் கிராமங்களில் இருந்தால்.., சிறப்பாக இருக்கும் என்றும் பலரும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்..
கடந்த ஆறு ஆண்டில் மட்டும் கிராம மேய்ச்சல் நிலத்தில் 1.25 லட்சம் மரங்களை நட்டு வைத்துள்ளனர். இதனால் கிராமத்தின் பசுமை அதிகரித்துள்ளது. அந்த கிராமத்தில் மட்டும் ஆண்டுக்கு 60 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர்.
பிப்லாந்திரி கிராமவாசிகள் பெண் பிள்ளைகள் ஒரு சுமை அல்ல ஒரு வரம் என்று நம்புகின்றனர். வயதிற்கு வந்தவுடனே திருமணம் செய்து வைக்கின்றவர்கள் மத்தியில், பிள்ளைகளின் படிப்பு தான் முக்கியம் என்று அவர்கள் ஆசையை நிறைவேற்றி வருகின்றனர்.
முக்கியமாக திருமணம் செய்து வைக்கும் பொழுது அவர்கள் விருப்பம் வின்றி திருமணம் செய்து வைக்க மாட்டார்களாம், மகள்கள் விருப்பட்டால் கூட விருப்பப்படும் ஆணுடனே திருமணம் செய்து வைத்து விடுவார்களாம்.
இதில் சோகம் தரும் விஷயம் என்ன வென்றால், அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தரும் மகள் 18 வயதில் நீரிழவு நோயால் இறந்துள்ளார். ஆனால் அவரின் தந்தை மகளின் நினைவாக ஒரு மரத்தை நட்டு பராமரித்து வருகின்றாராம்.
மகள் இறந்தது சோகம் என்றாலும்.., இந்த மரம் மற்றவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று அவர் கூறினார்.