அமைச்சர் உதயநிதி தலைக்கு இன்னும் அதிக பணம் கொடுப்பேன்..! மீண்டும் மிரட்டல் விட்ட அயோத்தி சாமியார்..!!
அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி போதாது என்றால் இன்னும் அதிக பணம் கொடுக்க நான் தயார், என அயோத்தி சாமியார் தெரிவித்துள்ளார்.
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு 10கோடி என அயோத்திய சாமியார் பரகாம்ச ஆச்சாரியா கூறியிருந்தார், அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “என் தலையை சீவ 10 கோடி வேணாம், 10 ரூபாய் போதும்” என பதில் அளித்தார். இந்த பேச்சு பட்டி தொட்டி எங்கும் பரவியது. மீண்டும் அயோத்தி சாமியார் கொலை மிரட்டல் விடும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.
Ayodhya Seer Paramhans Acharya reiterates his death threat to TN Minister Undayanishi Stalin over his 'Sanatana Dharma should be eradicated' remark, he says "…If Rs 10 crores is not enough for beheading him, I will increase the reward, but the insult of 'Sanatan Dharma' will… pic.twitter.com/kT1G0a7TGv
— ANI (@ANI) September 5, 2023
அதில் பேசிய அவர் உதயநிதி தலைக்கு 10 கோடி போதாது என்றால் இன்னும் அதிக பணம் கொடுக்க நான் தயாராக உள்ளேன். 100 கோடி மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதற்காக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்.
மேலும், சனாதன தர்மத்தை இழிவுப்படுத்தும் வகையில் அவர் செய்யும் செயல்களை சகித்து கொள்ள முடியாது, சனாதன தர்மத்தால், தான் நாட்டில் வளர்ச்சி அதிகரித்து கொண்டு இருக்கிறது எனவும் சாமியார் கூறியுள்ளார்.