ஈஷா மையத்தில் இருந்து மாயமான சுபஸ்ரீ சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக தமிழக காவல்துறை உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அதேநேரத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளால் நொந்து போன அண்ணாமலை, ஆவேசத்துடன் பதில் அளித்ததால், செய்தியாளர் சந்திப்பு ரணகளமாக மாறிப் போனது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காயத்ரி ரகுராம் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, தன் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுவது நல்லது தான், அப்போது தான் அது பேசுபொருளாகும் என கூறிய அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகுபவர்களை வாழ்த்தி அனுப்புவது தான் தன் வாடிக்கை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஈஷா யோக மையத்தில் இருந்து மாயமான சுபஸ்ரீ மர்ம மரணம் குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் நடைபெறுவது திமுக ஆட்சி தான், அவர்கள் தான் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என மழுப்பலாக தெரிவித்தார். தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, நீ எந்த சேனல், நீ எந்த சேனல் என கேட்டு, பத்திரிகையாளர்களிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
பைட் தன்னிடம் திமுக அமைச்சர் ஒருவரின் அந்தரங்க வீடியோ இருப்பதாகவும், அதனை வெளியிட தயாரா என சவால் விடுத்த அண்ணாமலை, அதனை தரும்படி செய்தியாளர் கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்துவிட்டார். அதேபோல் ரஃபேல் வாட்ச் ரசீது குறித்த கேள்விக்கு ஓட்டுக்கேட்பு கருவி இருக்கிறதா என ஆராயுமாறு எதிர்கேள்வி கேட்டு, வாட்சை கழற்றிக்கொடுத்தார்.
Discussion about this post