தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், திருமகன் ஈ.வெ.ரா. மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் நடந்து அனைவரது அன்புக்கும் உரியவராக திருமகன் ஈ.வெ.ரா. திகழ்ந்ததாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.