திருப்பூரில் பனியன் கொள்முதல் செய்து 1.45கோடி பண மோசடி..!! ஐதராபாத் தம்பதி சிக்கியது எப்படி..?
திருப்பூர் மாவட்டம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ராமசாமி. இவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக பனியன் துணிகள் ஏற்றுமதி செய்யும் ஒன்றை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பிரவீன் குமார் யெச்சூரி, கல்பனா யெச்சூரி தம்பதியினர்
ஈஷா நிட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பேஷன் போக்ஸ் நிறுவனத்திற்காக பனியன் துணிகளை கொள்முதல் செய்துள்ளனர். முதற்கட்டத்தில் பணத்தை கொடுத்து துணிகளை ஏற்றுமதி செய்துள்ளனர். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தொழில் ரீதியான நட்பு வளர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் துணிகள் கொள்முதல் செய்து விட்டு பின்னர் பணம் தருவதாக கூறி 1 கோடியே 45 லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளதாக மகேஷ் ராமசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போதெல்லாம் பணம் இல்லை என்றும், தொழில் நட்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதில் வேதனை அடைந்த மகேஷ், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருப்பூர் மாநகர மத்திய காவல்துறையினர் குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த இரண்டு பேரையும் மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் தெலுங்கானாவில் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
தென்னிந்தியாவின் முதல் எமு ஏ.சி ரயில்; சென்னை – செங்கல்பட்டு இடையே ஓட்டம்