கனமழை எச்சரிக்கை…!! முக்கிய பகுதிகளில் இன்று…!!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் தாழ்வு உருவாக காலதாமதம் ஆகியிருப்பதால் இன்று நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கக்கடலின் மேல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தற்போது கால தாமதம் ஆக்கிக்கொண்டு இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த தாலந்த காற்றழுத்த தாழ்வால் கடலோர பகுதிகளில் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் –
மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டதுடன் காணப்படும், எனவும் சென்னையின் கடலோர பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..