தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..! இடியமின் சொன்ன இடி அப்டேட்..!
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை பாண்டிச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் அதிக காற்றழுத்தம் காணப்படுவதால் மீனவர்கள் பொதுமக்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..