தமிழகத்தில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..! 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாவே கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னையில். நேற்று இரவு முதல் பெய்த மழையால் சாலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.. இந்நிலையில் அடுத்த 7 மணி நேரம் சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவவும். இதுவரை, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழை பதிவாகி இருப்பதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் விளக்கம் : மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும்.
இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருக்குமாறு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
– லோகேஸ்வரி.வெ