தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..!! குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்..!!
தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில்.., உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக ஏற்படுகின்ற வளிமண்டல காற்று காரணத்தால் புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதியில் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாருர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பொன்னேரி, போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post