தமிழகத்தில் வரும் நாட்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், வரும் 15ம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் , திருப்பத்தூர், வேலூர், நாமக்கர், கரூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
16ம் தேதி திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் மழை பொழியலாம்.
தமிழகத்தில் மதுரை, திருச்சி, வேலூர் போன்ற பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. கோடை மழை பெய்தால், வெப்பம் குறைய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவ மழை கேரளாவில் சற்று முன்னதாக மே 27ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.