மஞ்சள் நோயால் தாக்கப்பட்ட அவரை..! வேதனையில் விவசாயிகள்..! தொடரும் காய்கறிகள் விலை
கொடைக்கானல் மலை பகுதியில் அவரை கொடிகள் மீது மஞ்சள் நோய் தாக்கப்பட்டு அவரை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக மலைவாழ் விவசாயிகள் கவலை,உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலை கிராமங்களான பள்ளங்கி. கோம்பை காடு, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அவரை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
அவரையை ஆறு மாதங்கள் விவசாயம் செய்த பிறகே பயிராக மாறும், ஆனால் தற்போது அவரை கொடிகள் மீது மஞ்சள் நோய் தாக்கி இருப்பதால், அவரை காய்கள் மீது கரும்புள்ளிகள் விழுந்து காய்ந்துள்ளன. இதனால் அவரை விவசாயம் மிக பெரியளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக மலைவாழ் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பயிர்கள் நோய் தாக்கப்பட்டு இருப்பதை பார்த்து கவலையடைந்த விவசாயிகள், தற்போது அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட அவரை, இந்த வருடம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால், அவரை விவசாயத்தில் மிக பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது, என மலைவாழ் விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகை கேட்டு தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது ஒவ்வொரு காய்கறிகளின் விலை படிப்படியாக அதிகரிப்பது.., மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.