மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
சென்னை தலைமைச்செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்..
சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 23 புள்ளி 35 கோடி செலவில் திருச்செங்கோடு, ஈரோடு, இராசிபுரம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், ஏலகளங்கள், ஆய்வுக்கூடம், சங்கக் கட்டடம், திருமண மண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அதைதொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 453 புள்ளி 67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4272 புதிய குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 680 பயனாளிகளுக்கு 98 புள்ளி 28 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளை வழங்கினார்.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார்.
அதேபோல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக நிலஎடுப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு நிலவரித்திட்டப் பணி மேற்கொண்டு 3 ஆயிரத்து 543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக, 7 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.