ADVERTISEMENT
ஜல்லிக்கட்டு போட்டியின் போது சாதி பெயரை பயன்படுத்த கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவு…
ஜல்லிக்கட்டு போட்டியின் போது சாதி பெயரை பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர்.
மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை, காளைகளுக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது சாதி பெயரை பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளையின் உரிமையாளர் பெயரோடு சாதிப் பெயரைக் கூறி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்க்கக் கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன் தீண்டாமை உறுமொழி எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஜனவரி 16-ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், 17 ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவித்துள்ளார்.
மேலும், மாடு பிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.