ADVERTISEMENT
அண்ணாமலை பேரிடர் காலத்தில் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல…
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேரிடர் காலத்தில் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய வரலாற்றில் இந்தளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டது கிடையாது என்றும், ஹிட்லர் ஆட்சிக்குப் பின்னர் மோடியின் ஆட்சியில் தான் இது போன்ற நிகழ்வுகள் நடைப்பெறுவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.