தமிழக அரசின் கேள்விக்கு அமைதியாக இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி..! அப்படி என்ன கேட்டுருப்பாங்க..?
டிஎன்பிஎஸ்சி எழுத்து தேர்வுக்கு தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்யக்கூடாது என ஆளுநர் ரவி கேட்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் பணியாற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், அதற்காக ஆண்டு தோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படும். அது டிஎன்பிஎஸ்சியின் முக்கிய பணியும் கூட டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகள் பல மாதங்களாக காலியாக இருப்பதால் தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக ஓய்வு பெற்ற முன்னால் டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழகரசு முடிவு செய்தது.அதற்கான பட்டியல் ஆளுநர் ரவிக்கு அனுப்பப்பட்டது. சைலேந்திரபாபு நியமனத்துக்காக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோப்புகளை திருப்பி அனுப்புவதற்கான சரியான விளக்கம் கேட்டு தமிழக அரசு கேட்டதற்கு பதில் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு இருக்கட்டும் என சொன்னார்.
ஆனால் தமிழ்நாடு அரசு, நீங்கள் அவரை விளக்கி வைக்க ஒரு காரணமும் இல்லை ஆனால் அதற்கு அவர் தகுதியானவர் என்பதை சொல்ல எங்களிடம் ஆயிரம் உண்மைகள் இருக்கிறது.
நீங்கள் அவரை நீக்குவதற்கான உண்மையான காரணத்தை சொல்லியே ஆக வேண்டும் என கேட்க அதற்கு ஆளுநர் ரவி, எதுவும் பேசாமல் இருப்பது ஏன் எனவும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன நடைமுறைகளை விளக்கி சைலேந்திரபாபு பெயரை அரசு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..